எங்கு ஆரம்பித்தேன் இங்கு வருவதற்கு
என்ன செய்வேன் எங்கு செல்வேன்
இறை தேடி இன்பம் காண்பேனோ இல்லை நரை கூடி நின்று போவேனோ இன்று போகும் நாளையும் போகும் ஒருநாள் தெரியாமல் நின்று போகும் வாழ்க்கை
வருவதும் போவதுமே வாழ்க்கையெனில் என்ன வந்தால் என்ன, எங்கு போனால் என்ன?
காலத்தால் மாறுமெனில் காதல்
நியாயத்தில் வலி மட்டும் என் நெஞ்சில் அன்று காதோடு சொன்ன சொல்லோ காற்றோடு போனது நேற்று வெறுத்தென்னை பேசிய வார்த்தையில் விழிநீரோ வரண்டு போனது நீ சொன்ன வார்த்தையெல்லாம் நிஜமாக போகும்யெனில்
என் உடல் இருக்கும் உயிர் இருக்கும் உணர்வு இருக்காது நம்பிக்கை வையடி, என் நாடி துடிக்கும் வரை உன் நினைவை சுமப்பேன்.
No comments:
Post a Comment